வாழ்க்கையில்! அள்ளி அள்ளி கொடுத்திட...குறையாது- அன்பும் அறிவும்!
கொள் கொள் என நிறைத்திட...நிறையாது-
ஆசையும் ஏக்கமும்!
சேர்த்து சேர்த்து வைத்தாலும்...பொட்டும் கூட வராது-
காசும் கர்வமும்!
அளந்து அளந்து பார்த்தால்...நிலைக்கவே நிலைக்காது-
ஒட்டும் உறவும்!
அழுது அழுது உரைத்தாலும்...ஊர் கேட்காது-
நன்மையெல்லாம்!
எண்ணி எண்ணி வைத்தாலும்-
நினைத்ததெல்லாம் நடக்காது வாழ்க்கையில்!
COMMENTS